Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 11, Verse 37

1ஸ்மாச்11 தே1 ந நமேரன்மஹாத்1மன் க3ரீயஸே ப்3ரஹ்மணோ‌ப்1யாதி31ர்த்1ரே |

அனந்த1 தே3வேஶ ஜக3ன்நிவாஸ த்1வமக்ஷரம் ஸத3ஸத்11த்11ரம் யத்1 ||37||

கஸ்மாத்—--ஏன்; ச--—மற்றும்; தே--—உங்களை; ந நமேரன்--—அவர்கள் தலைவணங்கக் கூடாது; மஹா-ஆத்மன்—--சிறந்தவர்; கரீயஸே-—யார்-சிறந்தவர்; ப்ரஹ்மணஹ-—ப்ரஹ்மாவை விட; அபி—--விட; ஆதி--கர்த்தே-—மும்முதல் படைப்பாளிக்கு; அனந்த--—வரம்பற்ற; தேவ-ஈஶ—-- தேவர்களின் இறைவனே; ஜகத்-நிவாஸ—--ப்ரபஞ்சத்தின் அடைக்கலமான; த்வம்—--உங்களுக்கு; அக்ஷரம்—--அழியாத; ஸத்-அஸத்--—வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்படாத; தத்--—அந்த; பரம்—--அப்பாற்பட்ட; யத்---எதுவோ

Translation

BG 11.37: ஓ தலை சிறந்தவரே, அசல் படைப்பாளரான ப்ரஹ்மாவை விட சிறந்தவர் ஆகிய உங்களை, அவர்கள் ஏன் வணங்கக்கூடாது? ஓ எல்லையற்றவனே, ஓ தேவர்களின் இறைவனே, ஓ ப்ரபஞ்சத்தின் அடைக்கலமே, நீங்களே வெளிப்படையானது மற்றும் வெளிப்படுத்தப்படாதது ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்ட அழியாத உண்மை.

Commentary

முந்தைய வசனத்தில் குறிப்பிடப்பட்ட நடத்தை ஏன் பொருத்தமானது என்பதை நான்கு வசனங்களில் நியாயப்படுத்தி, அர்ஜுனன் க1ஸ்மாச்11 தே1 ந, அதாவது, 'ஏன் அவர்கள் செய்யக்கூடாது'. என்று பொருள்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் முழுப் படைப்பும் அவரிடமிருந்து வெளிப்பட்டு, அவரால் நிலைபெற்று, மீண்டும் அவருடன் இணையும் பொழுது, ​​அனைத்து உயிரினங்களும் ஏன் ஒப்புயர்வற்ற இறைவனுக்குத் தங்கள் பணிவான மரியாதைகளைச் செலுத்தக்கூடாது? படைப்பில் வெளிப்படும் அனைத்தும் அவரே, ஏனென்றால் அது அவரது ஆற்றல். அதுபோலவே வெளிப்படாமலிருக்கும் அனைத்துமே அவரது ஆற்றல் ஏனெனில் அது அவரது மறைந்திருக்கிற ஆற்றல். இருப்பினும், அவர் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படுத்தப்படாத இரண்டிற்கும் அப்பாற்பட்டவர், ஏனென்றால் அவர் —அனைத்து ஆற்றல்களின் மூலமும், உன்னத எஜமானனும் ஆன உச்ச உயர்வான ஆற்றல் உடையவர். எனவே, பொருள் ஆற்றலுக்கும் ஆன்மாக்களுக்கும் அப்பாற்பட்ட அவரது ஆளுமையை அவை இரண்டினாலும் அவரது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான எதையும் செய்ய முடியாது.

ப்ரஹ்மா ப்ரபஞ்சத்தில் மூத்தவர் என்பதால், இந்த இரண்டாம் படைப்பாளியான ப்ரஹ்மாவை விட ஸ்ரீ கிருஷ்ணர் பெரியவர் என்று அர்ஜுனன் குறிப்பாக குறிப்பிடுகிறார். அனைத்து உயிரினங்களும் ப்ரஹ்மாவின் சந்ததி அல்லது அவரது சந்ததியினரின் வழித்தோன்றல்கள். இருப்பினும், ப்ரஹ்மாவே ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவாக்கமான விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வளர்ந்த தாமரையிலிருந்து பிறந்தார். இவ்வாறு, எனவே அவர் இவ்வுலகத்தில் அனைவரின் மூதாதையர் ஆக கருதப்படும் ப்ரஹ்மாவிற்கு ஸ்ரீ கிருஷ்ணர் மூதாதையர். எனவே ப்ரஹ்மா அவரை வணங்குவது மிகவும் பொருத்தமானது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
11. விஸ்வரூப தரிசன யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!